இந்தியாவின் சித்தாந்தத்திற்கும் மோடிக்கும் இடையிலான யுத்தம் !எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு .

Advertisements

இந்தியாவின் சித்தாந்தத்தை பாதுகாக்கும் போராட்டம் இதுவாகும் என்று எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

பெங்களூரு: 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் இறங்கி உள்ளன.

அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 23-ந்தேதி முதன்முறையாக நடைபெற்றது.இதில், 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது மற்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் நேற்றும், இன்றும் நடைபெற்றது.

இந்த கூட்டம் இன்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டம் முடிந்த பிறகு ராகுல் காந்தி பேசியதாவது: இந்த போராட்டம் 2 அரசியல் கட்சிகளுக்கு இடையேயான யுத்தம் அல்ல, இந்தியாவின் சித்தாந்தத்தை பாதுகாக்கும் போராட்டம் இதுவாகும்.

இதுவரை வரலாற்றில், இந்தியாவின் கருத்தை யாராலும் எதிர்த்துப் போராட முடிந்ததில்லை என்பதை நாம் அறியலாம், இது இந்தியாவின் சித்தாந்தத்திற்கும் மோடிக்கும் இடையிலான யுத்தம்” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *