
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்றுறு, நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் ‘அரிசன் காலனி’ என்ற பெயரை அழித்து, மல்லசமுத்திரம் கிழக்கு எனப் பெயர் மாற்றம் செய்தார்.
மேலும், பெயர் மாற்றத்திற்காகப் போராடிய ஊர்ப் பெரியவர் கணேசனுக்கு பொன்னாடை அணிவித்த அமைச்சர், இதற்கான அரசாணையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
இதனிடையே பெயர் மாற்றத்திற்காகப் போராடிய பெரியவர் கணேசன் மற்றும் வழக்கறிஞர் அன்பழகன் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
இந்த நிலையில், ‘அரிசன் காலனி’ என்ற பெயரை அழித்து மல்லசமுத்திரம் கிழக்கு எனப் பெயர் மாற்றம் செய்த அமைச்சர் மற்றும் தமிழக அரசுக்குக் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.


