
புதுடில்லி: பார்லி., தாக்குதல் தினத்தை முன்னிட்டு, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் படத்திற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2001ம் ஆண்டு டிச.13ம் தேதி பலத்த பாதுகாப்பையும் தாண்டி பார்லி., வளாகத்தில் ஒரு காரில் 9 பயங்கரவாதிகள் வந்து தாக்குதல் நடத்தனர். பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த டில்லி போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
ஆனால் பயங்கரவாதிகளுக்கும் வீரர்களுக்கும் இடையிலான சண்டையில் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். பாதுகாப்புப்படையினர், டில்லி போலீசார் என 14 பேர் வீரமரணம் அடைந்தனர்.
பார்லி., தாக்குதல் நடத்தப்பட்டு இன்றோடு 22 வருடங்கள் ஆகிறது. வீரமரணம் அடைந்த பாதுகாப்புப்படையினர் படங்களுக்கு லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஆகியோர் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசினர்.


