Oscars 2024: முதல் முறையாக ஆஸ்கர் கைப்பற்றிய கிறிஸ்டோபர் நோலன்!

Advertisements

முதல்முறையாக ஆஸ்கர் வென்று கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அயன்மேன் புகழ் ராபர்ட் டவுனி ஜுனியர் அசத்தல்!

உலகளவில் திரைப்பட கலைஞர்களுக்காக வழங்கப்படும் விருதுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆஸ்கர் விருது. எப்படியாவது ஒரு ஆஸ்கார் வாங்கி விட வேண்டும் என்பதே உலகம் முழுவதும் இருக்கும் திரைப்பட கலைஞர்களின் அதிகபட்ச கனவாக இருக்கும். அந்தவகையில் 2024-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ஓபன்ஹெய்மர் மற்றும் மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் வெளியான கில்லர்ஸ் ஆஃப் தி பிளவர் மூன் மற்றும் எம்மா ஸ்டோனின் Poor Things ஆகிய படங்கள் பல்வேறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இதில் இதுவரை 8 முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட கிறிஸ்டோபர் நோலன் ஒருமுறை கூட ஆஸ்கர் வாங்காத நிலையில் இந்த முறை அவர் ஆஸ்கர் வாங்க வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்த நிலையில் பலருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஓபன்ஹெய்மர் படத்துகாகச் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை முதல் முறையாகக் கைப்பற்றினார் கிறிஸ்டோபர் நோலன். மொத்தம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட இவருடைய ஓபன்ஹெய்மர் திரைப்படம் சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு ஆகிய 7 முக்கியமான பிரிவுகளில் விருதுகளை வென்று அசத்தியது.

இதில் சிறந்த ஆண் துணை நடிகருக்கான விருது அயன்மேன் புகழ் ராபர்ட் டவுனி ஜுனியருக்கு கிடைத்தது. இதன் மூலம் இவரும் முதல் முறையாக ஆஸ்கர் விருதை வென்றார். மேலும் சிறந்த நடிகைக்கான விருது Poor Things படத்துக்காக எம்மா ஸ்டோனுக்கும் சிறந்த துணை நடிகைக்கான விருது The Holdovers படத்தில் நடித்த டேவின் ஜாய்க்கும் கிடைத்தது.

கடந்த ஆண்டு ராஜமௌலியின் RRR மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட The Elephant Whispers ஆவண படத்துக்கு விருது கிடைத்த நிலையில் இந்தமுறை இந்தியாவிலிருந்து எந்தப் படமும் ஆஸ்கருக்கு செல்லாதது இந்திய ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *