வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய மோடி

Advertisements

பிரதமர் நரேந்திர மோடி தனது எட்டு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு தில்லிக்கு வந்து சேர்ந்தார்.
நரேந்திர மோடி ஜூலை இரண்டு முதல் 9 வரை கானா, டிரினிடாட் டொபக்கோ, அர்ஜெண்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கோண்டார்.

இடையில் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிலும் கலந்துகொண்டார்.

நமீபியாவில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு விண்ட்ஹோக் நகரில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார். இடைவிடாமல் மழை பெய்து வந்தபோதும் பிரதமரின் தனி விமானம் தில்லியில் தரையிறங்கியது.

விமான நிலையத்தில் அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *