
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிற நிலையில், தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.


