தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது!

Advertisements

கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்றைய காலை நேர விலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 70 உயர்ந்து இல்லத்தரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதன் படி ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 560 உயர்ந்து, சவரன் ரூபாய் 56,520க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் ஆபரண தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வரும் நிலையில் தங்கத்தின் விலை குறையும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டும் உயர்ந்து வருவது நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள், சீனா அதிகளவிலான தங்கத்தை இருப்பு வைக்கத் துவங்கியிருப்பது, பங்குச் சந்தை சரிவு என்று தங்கத்தின் விலை உயர்வுக்குப் பொருளாதார வல்லுநர்கள் பல காரணங்களைக் கூறி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *