
காசாவில் இஸ்ரேல் கடுமையாக தாக்குதல்; நடத்தியதில், 46 குழந்தைகள் உள்பட 104 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் உயர் மாய்க்கப்பட்டும், சிலர் பணய கைதிகளாக சிறை பிடித்தும் செல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். அதன்பின்னர், அமெரிக்கா தலைமையில் நடந்த மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் பலன் ஏற்பட்டது.
இதனால், ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதனால், காசா மக்கள் சொந்த ஊருக்கு திரும்பும் ஆவலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே விதிமீறலில் ஈடுபட்டு, இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரை ஹமாஸ் அமைப்பு உயிர் மாய்த்தல் செய்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் தொடர்ச்சியாக, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். 253 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




