TN Assembly Special Session: கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி!

Advertisements

சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வருவதற்கு முன்பு ஏன் சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

சென்னை:கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காகத் தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அப்போது எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;

அரசின் தனித்தீர்மானத்தை முதல் அமைச்சர் கொண்டுவந்துள்ளார். மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள்குறித்து அரசு ஆய்வுசெய்ய வேண்டும். கவர்னர் மசோதாக்களை நிறுத்திவைப்பது எனில், அது ரத்து, நிராகரிப்பு என அர்த்தம் இல்லை. ரத்துசெய்யப்பட்டதாகவே அர்த்தம்.

ஏற்கெனவே நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காததால் சுப்ரீம் கோர்ட்டை அரசு நாடியுள்ளது. சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வருவதற்கு ஏன் சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்தால் சிறப்புக் கூட்டம் கூட்டுவதற்கு அவசியம் இல்லாமல் போய்விடும்.

அவசர அவசரமாக ஏன் சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என மக்களுக்குச் சந்தேகம் ஏற்படுகிறது.’ இவ்வாறு அவர் பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *