
எதிர்ப்பை மீறிக் காதல் திருமணம் செய்துகொண்ட மருமகனை மாமனார் துப்பாக்கிகளால் சுட்டு கொண்டதில் அங்கித் மற்றும் ரோகித் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.
முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள புலத் கிராமத்தில் வசித்து வருபவர் ஹரிமோகன். இவருடைய மகளை அங்கித் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்த விவரம் தெரியவர, காதலுக்கு ஹரிமோகன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இருவரும் ஒரே சமூகத்தினர் என்றபோதும், இவர்களின் காதலை ஹரிமோகன் கண்டித்துள்ளார். எதிர்ப்பும் வலுத்துள்ளது. இந்நிலையில், ஹரிமோகனின் மகளை அங்கித் திருமணம் செய்து கொண்டார். இதனால், ஆத்திரத்தில் இருந்த ஹரிமோகன் நேற்று அங்கித்திடம் சென்று சண்டை போட்டுள்ளார்.
அப்போது, இருதரப்பினரும் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். துப்பாக்கிகளால் சுட்டு கொண்டதில் அங்கித் மற்றும் ரோகித் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.
ஹரிமோகன் மற்றும் ராகுல் இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கா



