chennai:கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் திடீர் மயக்கம்…மெரினாவில் பரபரப்பு!

Advertisements

மெரினா கடற்கரையில் கூட்ட நெரிசல் மற்றும் அதிக வெப்பம் காரணமாகக் குழந்தைகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர்.

சென்னை:மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகசத்தைப் பார்க்க 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்து இருந்தனர். இதனால் கடற்கரையில் கூட்டம் அலைமோதியது. விமானங்கள் சீறிப்பாய்ந்தபோது பொதுமக்கள் உற்சாகக் குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

கூட்ட நெரிசல் மற்றும் அதிக வெப்பம் காரணமாகக் குழந்தைகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு அங்குத் தயாராக இருந்த ஆம்புலன்சில் உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *