அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வரும்  27ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு

Advertisements
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வரும்  27ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர www.tngasa.in என்ற இணைய தளம் மூலம் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை பதிவு செய்ய வரும்  27ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  1,61,324 மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளனர்.
இதில் மாணவர்கள் 46,691 பேரும்  மாணவிகள் 75,959 பேரும்  விண்ணப்பித்துள்ளனர். மேலும்  மூன்றாம் பாலினத்தவர்கள் 48 பேர் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *