Hydreabad : மெஸ்ஸியுடன் நாடளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி சந்திப்பு.!

Advertisements

ஐதராபாத்தில் அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸியுடன் நாடளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நேரில் சந்தித்தார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள உப்பல் மைதானத்தில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி வருகை தந்தார்.

இந்நிகழ்ச்சியில் தெலங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அணியுடன், மெஸ்ஸியின் அணி போட்டியில் விளையாடியது. மேலும், இந்தப் போட்டியைக் காண நாடளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியை கால்பந்து வீரர் மெஸ்ஸி நேரில் சந்தித்தார். அப்போது மெஸ்ஸி தனது கையெழுத்திட்ட ஜெர்சியை ராகுல் காந்திக்கு பரிசாக வழங்கினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *