இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு.!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து பாமக போட்டியிட்டிருந்த நிலையில், தற்போது வரவிருக்கும் இடைத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு கிடையாது என்று அவர் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாகக் கூட்டணிக் கட்சிகள் இடைத்தேர்தலிலும் தங்களது ஆதரவைத் தொடரும் சூழலில், பாமகவின் இந்தத் தனித்து நிற்கும் மற்றும் நடுநிலைப்பாடுடைய முடிவு பிரதான கட்சிகளுக்கு இடையே எதிர்பாராத திருப்பத்தையும் அரசியல் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *