Stray Cattle: மாடுகளுக்கு 10ஆயிரம் அபராதம்!

Advertisements

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை 10ஆயிரம் வரை உயர்த்த சென்னை  மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் கூடியது. அப்போது சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை 10ஆயிரம் வரை உயர்த்த சென்னை  மாநகராட்சி தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

சாலைகள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக மாடுகள் சுற்றித் திரிந்தால் தற்போது 2ஆயிரம் வரை உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்களுக்கான இடையூறு ஏற்படாமல் தவிர்க்க மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் அபராதம் தொகையை 10ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மாடு முதல்முறையாக பிடிக்கப்பட்டால்5,000ரூபாயும், மீண்டும் பிடிக்கப்பட்டால் 10,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படவுள்ளது. தற்போது நடைபெற்று வரும் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 3468 மாடுகள் பிடிக்கப்பட்டு, 65 லட்சத்து 80ஆயிரத்து 700 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *