
தென் மாவட்டங்களில், மார்ச் 28, ஏப், 2, 3ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை: தென் மாவட்டங்களில், இன்று( மார்ச் 28), ஏப்.,2,3 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாகச் சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவியது.
தென் மாவட்டங்களில், மார்ச் 28, ஏப், 2, 3ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மார்ச் 28, ஏப்.,2,3 தேதிகளில் வறண்ட வானிலையே நிலவும்
வரும் 29 முதல் ஏப்., 1 வரை தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படும்.
மார்ச் 28 முதல் ஏப்., 01 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த 5 நாட்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது, ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 – 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 – -26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


