Tiruppur: மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

Advertisements

தனது பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக மகன் மற்றும் மருமகள் தன்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறி மூதாட்டி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சந்திரா என்பவர் தனது கணவர் முத்துசாமி இறந்த நிலையில் தனது மகன் சுரேஷ்குமார் மற்றும் ரூபினி ஆகியோருடன் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பிருந்து சுரேஷ்குமார் மற்றும் மருமகள் ரூபினி ஆகியோர் தனது பெயரில் உள்ள 15 லட்சம் மதிப்புள்ள 8 சென்ட் நிலத்தை அபகரிப்பதற்காகப் பத்திரத்தில் கையெழுத்து போடு என வற்புறுத்தி மிரட்டல் விடுத்து வருவதோடு , தன்னை கொடுமைபடுத்துவதாகவும் இதுகுறித்து ஏற்கனவே காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.

இந்தநிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மகன் மற்றும் மருமகள் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வருவதால் அவர்கள்மீது நடவடிக்கை எடுத்துத் தனக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்து தர வேண்டும் என வலியுறுத்திச் சந்தரா என்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென மண்ணனையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாகப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மூதாட்டி மீது தண்ணீர் ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *