
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவரும், தமிழக முதல்வரும், அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில், விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 ஆவது ஜெயந்தி விழாவும், 63 ஆவது குருபூஜை விழாவும் தொடங்கியது.
இந்நிலையில், பசும்பொன்னில் நடைபெறும் குருபூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சா்கள் ஆகியோர் பங்கேற்கின்றனா்.
இதைத்தொடர்ந்து, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியும், தேமுதிக, மதிமுக, காங்கிரஸ், பாஜக, நாதக, சமுதாய அமைப்பினரும், விவசாயிகள் சங்கங்கள் சாா்பிலும் தேவா் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.
இதையடுத்து, குடியரசு துணைத் தலைவா், தமிழக முதல்வா் வருகையையொட்டி, பசும்பொன்னில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.



