குட்கா விற்பனை செய்தவர்கள் கைது!

Advertisements

பொன்னேரி:

ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவுபடி துணை கமிஷனர் ஆலோசனையின் பேரில் பொன்னேரி பழவேற்காடு சாலை திருப்பாலைவனம் பஜாரில் திருப்பாலைவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இருசக்கர வாகனத்தைச் சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

பின்னர் பொன்னேரி தாயுமான் செட்டி தெருவைச் சேர்ந்த முசாமின் (50) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 65 கிலோ குட்காவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை செய்ததில் பொன்னேரி தாயுமாண் செட்டி தெருவில் மளிகைக் கடை நடத்தி வரும் பெருலால் (28) என்பவர் கடையில் பதுக்கி வைத்து அங்கிருந்து கிராமங்களில் உள்ள கடைகளுக்கு முசாமின் மூலம் இருசக்கர வாகனத்தில் விற்பனை செய்வது தெரிய வந்தது.

பின்னர் இருவரையும் கைது செய்து கடையில் பதுக்கி வைத்த 65 கிலோ குட்கா, விற்பனை செய்த 65 கிலோ குட்கா என மொத்தம் 130 கிலோவை திருப்பாலைவனம் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *