தங்கம் விலை உயர்வு!

Advertisements

சென்னை:

சென்னையில் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், 19-ந்தேதி முதல் தங்கத்தின் விலை மீண்டும் உயர தொடங்கியது. படிப்படியாக உயர்ந்து கடந்த 21-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரத்து 120-க்கு விற்பனையானது.

இந்த விலை அடுத்த 2 நாட்களில் அதாவது 23-ந்தேதி (சனிக்கிழமை) ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் ரூ.58 ஆயிரத்து 400-க்கு ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.56,720-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,160-க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,280-க்கும் விற்பனையாகிறது.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *