
Samantha Ruth Prabhu
நடிகை சமந்தா தன்னுடைய மருத்துவ சிகிச்சைக்காக, பிரபல முன்னணி நடிகரிடமிருந்து 25 கோடி கடனாகப் பெற்றுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், சமூக வலைத்தளத்தில் தீயாகப் பரவி வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தபின்னர், தீவிரமாகத் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், திடீரென மாயோ சிட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார்.

இதனால் எழுந்து கூட நிற்க முடியாமல் சுமார் ஆறு மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்த சமந்தா, அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்த பின்னரே ஓரளவில் உடல் நலம் தேறினார். எனினும் சமந்தா மயோசிட்டிஸ் பிரச்சனையிலிருந்து முழுமையாகக் குணமடையவில்லை என்பதால், தற்காலிகமாகத் திரைப்படங்களிலிருந்து விலகி, மயோசிட்டிஸ் பிரச்சனைக்குச் சிகிச்சை எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்க்கு இடையில், விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகக் கமிட் ஆகி இருந்த, ‘குஷி’ திரைப்படம் மற்றும், வருண் தவானுடன் ‘சிட்டாடல்’ ஆகிய வெப் தொடர்களில் நடித்து முடித்தார். மேலும் கமிட் ஆகி இருந்த படங்களிலிருந்து விலகியது மட்டுமின்றி, தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்ற முன் தொகையையும் திருப்பிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
Samantha Ruth Prabhu
தன்னை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்வதற்காகப் பாலி நாட்டுக்குச் சென்று, தன்னுடைய வெக்கேஷனை என்ஜாய் செய்து வரும் சமந்தா, அதற்கு முன்னதாகத் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் சமந்தா பற்றிய தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாகப் பரவி வருகிறது.
தெலுங்கு சேனல் ஒன்று சமந்தா தற்போது பண நெருக்கடியால் கஷ்டப்பட்டு வருவதற்காகவும், தன்னுடைய சிகிச்சைக்காகப் பிரபல தெலுங்கு நடிகரிடமிருந்து 25 கோடி கடனாகப் பெற்றுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த நடிகர் யார் என்பது குறித்த எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் இந்தச் செய்திகுறித்த, எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

