Thirumavalvan:ஆட்சியில் பங்குகுறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம்!

Advertisements

திமுக – விசிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்று திருமாவளவன் கூறினார்.

சென்னை:சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது விசிகவின் மதுஒழிப்பு மாநாட்டிற்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தார். மேலும் மதுவிலக்கு தொடர்பாக ஒரு தேசிய கொள்கையை மத்திய அரசு நிறைவேற்றத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது:-அமெரிக்கா சென்று முதலீடுகளை ஈர்த்து வந்த முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தோம். முதல்-அமைச்சரின் அமெரிக்கா பயணத்தில் 19 ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது இது வரலாற்று சிறப்பு மிக்க பயணம்.

அக்டோபர் 2-ம் தேதி விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன் வைக்க உள்ளோம். விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெறவுள்ள மதுவிலக்கு மாநாட்டில் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்பார்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வீடியோகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசவில்லை. திமுக – விசி கூட்டணி உறவில் எந்த விரிசலும் இல்லை; நெருடலும் இல்ல. நாங்கள் கூட்டணியில் உறுதியாகவே இருக்கிறோம். தேர்தலுக்கும் முதல்-அமைச்சருடனான சந்திப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆட்சியில் பங்குகுறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். மதுவிலக்கு மாநாட்டைத் தேர்தல் அரசியலோடு இணைத்து, பிணைத்துப் பார்க்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *