Murder: மருமகனை கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை!

Advertisements

விருத்தாசலம் அருகே மருமகனை மாமனார் கட்டையால் அடித்துக் கொலை செய்த வழக்கில் மாமனாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 3000 ரூபாய் அபராதம் விதித்து விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரபாசந்திரன் தீர்ப்பு வழங்கினார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நிதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பூமாலை மகன் ரகுபதி இவரும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜன் மகள் சத்யா இரண்டு பேரும் கடந்த 10 ஆண்டுகள் முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் ரகுபதி வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு மனைவி சத்யாவை அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் ரகுபதி கடந்த11.07.2023 அன்று குடித்துவிட்டு மனைவி சத்யாவிடம் சாப்பிடும்போது தகராறு செய்துள்ளார்.

இதனை அறிந்த சத்யாவின் தந்தை செல்வராஜன் மற்றும் அவரது மனைவி சுசிலா இரண்டு பேரும் ரகுபதியிடம் கேட்டுள்ளனர். அப்போது வாய் தகராறு ஏற்பட்டு இரண்டு தரப்பினரும் தாக்கியுள்ளனர் ரகுபதி, சுசிலாவையும் அவரது மனைவி சத்யாவையும் தாக்கியுள்ளார். இதில் இரண்டு பேரும் காயம் ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் செல்வராஜன் ரகுபதி வீட்டில் தனியாக இருக்கும்போது உள்ளே சென்று கட்டையால் சரம் மாறித் தாக்கி உள்ளார். இதில் ரகுபதி பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்துச் சம்பவ இடத்திலே இறந்தார். இதனை அறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகுபதியின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

பின்னர் இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி பிரபாசந்திரன் ரகுபதியை கட்டையால் அடித்துக் கொலை செய்த செல்வராஜன்க்கு 302 பிரிவின் படி ஆயுள் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் 449 பிரிவின் படி ஐந்து வருடம் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார் மருமகனை கட்டையால் அடித்துக் கொலை செய்த மாமனருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய சம்பவம் விருத்தாசலம் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *