
தமிழகத்தில் பணியாற்றும் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் பணியாற்றும் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி,கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.,யாக சமய் சிங் மீனா,திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.,யாக பிரதீப்,திண்டுக்கல் எஸ்.பி.,யாக இருந்த பாஸ்கரன்.
சென்னை கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனராக நியமனம்சிறைத்துறை கூடுதல் டிஜிபி., மகேஸ்வர் தயாள், டி.என்.பி.எல் நிறுவன தலைமை ஊழல் கண்காணிப்பு அலுவலராக அமரேஷ் புஜாரி. சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு போலீஸ் இணை கமிஷனராக தர்மராஜன்.
மதுரை தெற்கு போலீஸ் துணை கமிஷனராக பாலாஜி,கூடுதல் டிஜிபி கல்பனா நாயக், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளராக நியமனம்,டான்ஜெட்கோ ஊழல் தடுப்பு ஐ.ஜி.,யாக பிரமோத் குமார்,பெண்கள்,
குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஐ.ஜி.,யாக தமிழ்சந்திரன்,கோவை மண்டல குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு சி.ஐ.டி பிரிவு எஸ்.பி.,யாக சந்திரசேகரன் – ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

