EPS:ஏதோ காரணத்தைக் கூறி தப்பிக்க நினைப்பதா? தமிழக அரசுக்கு இ.பி.எஸ்.கடும் கண்டனம்!

Advertisements

சேலம்:சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தைக் காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகினர். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* விமான சாகசத்தைக் காண வருவோருக்கு அடிப்படை பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால் 5 உயிர்கள் பலியாகி உள்ளது.

* கூட்ட நெரிசலில் சிக்கியதில் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

* முதலமைச்சரின் அறிவிப்பை அடுத்துதான் நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கில் மக்கள் குவிந்தனர்.

* எவ்வளவு பேர் வருவர் என உளவுத்துறையிடம் தகவல் பெற்று திட்டமிட்டு அடிப்படை வசதிகளைச் செய்து தருவது அரசின் கடமை.

* முதலமைச்சரின் அறிவிப்பை நம்பி நிகழ்ச்சியைக் காண வந்த மக்களுக்குத் துன்பம் நிகழ்ந்துள்ளது.

* பிற மாநில நகரங்களில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றபோது திட்டமிட்டு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

* இனியாவது லட்சக்கணக்கான மக்கள் கூடும் நிகழ்விற்கு முன்கூட்டியே திட்டமிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.

* இதை அரசியலாக்க வேண்டாமென அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லி இருக்கிறார். 5 பேர் உயிரிழந்த விவகாரத்தைக் கூட அரசியலாக்கக்கூடாதா?

* வாருங்கள் என அழைத்து அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர், மக்களுக்கான தகுந்த பாதுகாப்பை செய்யத் தவறி உள்ளார்.

* ஊடகம், செய்தியில் வருவதை தான் நான் கூறுகிறேன். பல லட்சம் பேர் வரும் நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடுகள் அவசியம்.

* ஒரு நிகழ்ச்சியைக் கூடச் சரியாக நடத்த முடியாத கையாளாகாத அரசு தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறது.

* உளவுத்துறை எதற்காக வைத்துள்ளீர்கள்? அது செயல்படவில்லையென நீங்களே ஒத்துக்கொள்கிறீர்களா?

* அழைப்பு விடுக்காவிடில் கண்டிப்பாக இவ்வளவு பேர் கூடியிருக்க மாட்டார்கள். எனவே அழைப்பு விடுத்த முதல்வரே பொறுப்பு.

* கூட்டநெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு முதலமைச்சர் தலைமையிலான திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *