Anbumani Ramadoss:போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை அழைத்துப் பேசி அரசுத் தீர்வு காண வேண்டும்!

Advertisements

சென்னை:பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், பதவி உயர்வைப் பாதிக்கும் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்களைக் காவல்துறை கைது செய்திருக்கிறது. ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேச்சு நடத்த வேண்டிய அரசு, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டு அதன் கோர முகத்தைக் காட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் அடக்குமுறைகள் தொடர்ந்தால், அவர்களுக்கு ஆதரவாகவும், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் எச்சரித்திருக்கிறது.

எனவே, ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்க முனையாமல், அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமான சிலவற்றையாவது முதல்கட்டமாக நிறைவேற்றத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *