அல்ஜீரியாவில் கார் மீது பஸ் மோதியதில் தீப்பிடித்து எரிந்து 34 பேர் பலி!

Advertisements

அல்ஜீரியா : ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் டமன்ராசெட் மாகாண சாலையில் பயணிகளை ஏற்றி கொண்டு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது.

அடோல் கிராம சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓட தொடங்கியது. இதனால் சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது பஸ் பயங்கரமாக மோதியது. இதில் பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து தீப்பிடித்தது.

சிறிது நேரத்தில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

பஸ்சில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர். ஜன்னல் வழியாக வெளியே தப்ப முயன்றனர். ஆனால் தீயில் கருகி 32 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டனர்.

தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *