மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை!

Advertisements
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.   இதற்காக அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு வருகைத் தந்த எடப்பாடி பழனிசாமிக்குக் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குத் தலைமை கழக நிர்வாகிகளுடன் 85 மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
பின்னர், எடப்பாடி பழனிசாமி பூத் கமிட்டியை அமைப்பது தொடர்பான கருத்துக்களை கேட்டார். மேலும், அவர் சட்டமன்ற தேர்தலைச் சந்திப்பதற்கு அனைவரும் முழுவீச்சில் தயாராக வேண்டும் என்றும், நமது உழைப்பு அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *