Sexual Complaint – B. S. Yediyurappa: எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

Advertisements

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் முதல் மந்திரிமீது வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா. இவரின் வீட்டிற்கு கடந்த மாதம் 2-ந்தேதி கல்வி தொடர்பாக உதவி கேட்டு 17 வயது சிறுமி ஒருவர் தனது தாயுடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில், அந்தச் சிறுமியை எடியூரப்பா ஒரு தனி அறைக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகக் காவல் நிலையத்தில் தற்போது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

உனக்குத் தேவையான உதவிகள் செய்கிறேன் என்றும், இதனை வெளியே சொன்னால் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தனது மகளிடம் எடியூரப்பா கூறியதாகச் சிறுமியின் தாய் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் முதல் மந்திரிமீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மைதானா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் முதல் மந்திரிமீது வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *