Madras HC: நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை!

Advertisements

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியாக இருப்பவர் குமரேஷ் பாபு. இவர் தனது குடும்பத்துடன் சென்னை அபிராமபுரத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில், குமரேஷ் பாபு மகள் கிரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் கிரா ஏற்கெனவே இறந்து விட்டதை உறுதி செய்ததுடன், பிரேத பரிசோதனைக்குக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் கிரா தற்கொலைக்குக் காரணம் தெரியவில்லை என்றதுடன், வழக்குப் பதிவு செய்தனர்.

நீதிபதியின் மகள் கிரா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும், பணியிலிருந்து வீட்டிற்கு வந்தவர் தனது அறைக்குச் சென்றார் என்றும், நீண்ட நேரமாகியும் அவரது அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்து கதவைத் தட்டியதாகவும் கூறப்படுகிறது. அறை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் கிரா தூக்கில் தொங்கியுள்ளார்.

நீதிபதி குமரேஷ் பாபு அதிமுக பொதுக்குழு வழக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நில அபகரிப்பு வழக்குகளை விசாரித்தவர். இந்த நிலையில் நீதிபதியின் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *