‘சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும், தமிழ் கட்டாயம்’ என, பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது.
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் துறை இயக்குனர் நாகராஜ முருகன் சுற்றிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி மாநில பாடத்திட்ட பள்ளிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் செயல்படும் சி.பி.எஸ்.இ., – ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும், 2024 – 25ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக பயிற்றுவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள், பொது தேர்விலும், தமிழை ஒரு தேர்வாக எழுத வேண்டியதும் கட்டாயம் எனவும், இதற்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் போன்றவை, விரைவில் வடிவமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து தனியார் பள்ளிகளும், தமிழில் தகுதியான ஆசிரியர்களாக பணி அமர்த்தி, மாணவர்களுக்கு தமிழ் பாடத்தை கட்டாயம் கற்றுத் தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ் கட்டாய பாட முறை குறித்த அறிவிப்பை, தனியார் பள்ளிகள் கடைபிடிப்பதை, மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.