சூடானில் தவிக்கும் இலங்கை மக்களை மீட்க உதவி.!இந்தியாவுக்கு இலங்கை பாராட்டு.!

Advertisements
Advertisements

சூடானில் தவிக்கும் இலங்கை மக்களை மீட்க உதவிக்கரம் நீட்டும் இந்தியாவுக்கு இலங்கை பாராட்டு தெரிவித்துள்ளது.
 
கொழும்பு, உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இலங்கை மக்கள் 30 பேரும் தத்தளித்து வருகின்றனர். அவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்டு கொண்டு வருவதற்கு இந்தியா உதவிக்கரம் நீட்டுகிறது. இதற்காக இந்தியாவை இலங்கை மனதார பாராட்டி உள்ளது. இதையொட்டி இலங்கை வெளியுறவு மந்திரி அலி சப்ரி டுவிட்டரில் கூறுகையில், சூடானில் தவித்து வருகின்ற இலங்கை மக்களின் நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அவர்களைப் பத்திரமாக மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்திருந்தார். மேலும் இந்தியா ஆதரவுக்கரம் நீட்ட முன் வந்துள்ளதற்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *