அயர்லாந்து-வங்கதேசம் ஆட்டம் மழையால் ரத்து.! உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற தென் ஆப்பிரிக்கா..!

Advertisements
Advertisements

அயர்லாந்து-வங்கதேசம் இடையே  நடைபெற்ற ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

 அயர்லாந்து-வங்கதேசம் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது பேட்டிங்கை தொடங்கிய அயர்லாந்து 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது.  மேலும் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டது. இதன் காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை.

இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என அயர்லாந்து கைப்பற்றி இருந்தால் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றிருக்கும்.   தற்போது வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக நடைபெறாத காரணத்தால் உலகக்கோப்பைக்குக் தென் ஆப்பிரிக்கா அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *