Senthamizhan Seeman Candidates: நாம் தமிழர் கட்சி சீமான் அதிரடியாக வேட்பாளர்களை அறிவிப்பு !

Advertisements

 5 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார்.

திருச்சி: பாராளுமன்ற தேர்தலுக்குத் தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜ.க. கட்சிகள் தங்களது தலைமையில் கூட்டணியை அமைத்துத் தொகுதி ஒதுக்கீட்டுக்கான பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களைப் போலவே தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாகத் திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர் ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே இடும்பாவனம் கிராமத்தில் வேட்பாளர்களை அறிவித்த சீமான் தொடர்ந்து அவர்களை அறிமுகப்படுத்திப் பேசினார். அதன்படி திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு குழுத் தலைவர் டி. ராஜேஷ், தஞ்சாவூர் தொகுதிக்கு எம்.இ.ஹிமாயூன் கபீர், மயிலாடுதுறை தொகுதிக்குப் பி. காளியம்மாள், நாகப்பட்டினம் தொகுதிக்கு எம். கார்த்திகா, நாகப்பட்டினம் தொகுதிக்கு ஆர். தேன்மொழி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர.

திருச்சி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு உள்ள ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு குழுத் தலைவர் டி. ராஜேஷ் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம், ஸ்டெர்லைட், நீட் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மயிலாடுதுறை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பி. காளியம்மாள் நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக உள்ளார்.

தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. போன்ற அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு கூட்டணியெனப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 5 வேட்பாளர்களை அறிவித்துள்ளது அரசியல் கட்சிகளுக்கு இடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது அறிவித்துள்ள 5 வேட்பாளர்களில் 3 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு அக்கட்சியினுடைய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *