
எதிர்க்கட்சிகள் வக்பு மசோதா தொடர்பான கூட்டுக்குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் கடுமையான அமளியில் ஈடுபட்டனர்.
இதற்குப் பிறகு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையிலிருந்து வெளியேறினர். கூட்டுக்குழுவின் அறிக்கை ஏற்கனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மக்களவையில் புதிய வருமான வரி மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வருமான வரி மசோதாவை நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்தார்.
வருமான வரி சட்டம், வரி செலுத்துவோருக்கு எளிதில் புரியும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட புதிய மசோதா ஆகும். நிதி அமைச்சரின் பரிந்துரையைத் தொடர்ந்து, நிலைக்குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டது.
