கருணாநிதியின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!

Advertisements
Advertisements

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த தினம் இன்று எளிமையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின்   மரியாதை செலுத்தினார். அவருடன் தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் சென்று மரியாதை செலுத்தினர்.  

முன்னதாக அண்ணாவின் நினைவிடத்திலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  இதை தொடர்ந்து கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் சென்று அங்குள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்தார். முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகன சைக்கிள், ஸ்மார்ட் போன் ஆகியவற்றை தலா 5 பேருக்கு வழங்கினார். அதன் பிறகு கோட்டைக்கு சென்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *