
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் யுஏஇ அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
துபாயில், 12 ஆவது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இந்த, போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஏ பிரிவில், இந்தியா, யுஏஇ அணிகள் மோதின. இதில், யுஏஇ அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 433 ரன்கள் குவித்தது. இதில், மிகவும் அதிரடியாக விளையாடி வைபவ் சூர்யவன்ஷி 171 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 434 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய யுஏஇ அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.


