டேராடூன் – டெல்லி இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவை இன்று முதல் தொடக்கம்..!

Advertisements

டேராடூன் – டெல்லி இடையிலான நாட்டின் 17வது வந்தே பாரத் ரெயிலை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

Advertisements

  உத்தரகாண்ட் மாநிலத்திற்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் டேராடூன் மற்றும் டெல்லி இடையே இயக்கப்படுகிறது.   இது டெல்லிக்கு இயக்கப்படும் ஐந்தாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் என்பதும் குறிப்பிடத்தக்கது.   இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி,  காணொளி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் 314 கிமீ தூரத்தை நான்கு மணி நேரம் 45 நிமிடங்களில் கடக்கும் என்றும், புதன்கிழமை தவிர வாரத்தின் ஆறு நாட்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் இருந்து டெல்லி வரை இந்த ரெயில் சேவை செயல்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *