
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் அமைத்து வரக்கூடிய 15 கோடி ரூபாய் செலவில் மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். அதேபோல் தொழிற்பேட்டையில் மனை ஒதுக்கீடு பெற்ற தொழில்முனைவோர்களில் 5 ஒதுக்கீட்டாளர்களுக்கு பட்டாக்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பொதுவாக அரசு சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் மற்றும் திட்டபணிகள் ஆகியவற்றை காணொலி காட்சி மூலமாக பிற மாவட்டங்களில் நடக்கக்கூடிய பணிகளை துறை ரீதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
