ஐ.பி.எல்-டெல்லியை வீழ்த்தியது சென்னை அணி..!

Advertisements
Advertisements

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. ஷிவம் துபே 25 ரன்கள் சேர்த்தார். ருதுராஜ் 24 ரன், அம்பதி ராயுடு 23 ரன், ரகானே 21 ரன், ஜடேஜா 21 ரன் அடித்தனர். 8-வது வீரராக களமிறங்கிய கேப்டன் டோனி, அதிரடியாக ஆடி 9 பந்துகளில் 20 ரன்கள் விளாசினார். டெல்லி கேப்பிட்டல்ஸ் சார்பில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட், அக்சர் பட்டேல் 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணியின் ரூசோவ் 35 ரன்னும், மனீஷ் பாண்டே 27 ரன்னும், அக்சர் படேல் 21 ரன்னும் எடுத்தனர். இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட் 140 இழப்புக்கு ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *