
சென்னை:
பரபரப்பான சென்னையில் காலை முதல் இரவுவரை போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும்.
இதனால் பணிக்குச் செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிபடுகின்றனர்.
இந்த நிலையில், போக்குவரத்து நெரில் மிகுந்த ராமாபுரத்தில் சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே சாலையில் ஏகே 47 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனைச் சிவராஜ் என்பவர் மீட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
