காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி…

Advertisements

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisements

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் இரண்டு குழந்தைகள், கடந்த 17-ம் தேதி அன்று மாலை நெல்வாய் ஏரியில் எதிர்பாராத விதமாக விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாக தெரிவித்திருந்தார்.  உயிரிழந்த சிறார்களின் பெற்றோருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்ததோடு, அவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *