உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில்ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறோம்…….தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு…

Advertisements
Advertisements

உலகின் பழமையான மொழி தமிழ் என்றும்,இதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப் படுகிறோம் என்று தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தமிழ் புத்தாண்டு விழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, டெல்லியில் மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் தனது இல்லத்தில், தமிழ் புத்தாண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் என பலர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா தான் என்றும், அதற்கான வரலாற்று குறிப்புகள் இங்கு நிறைய உள்ளது என தெரிவித்தார்.
அதற்கு ஒரு தகுந்த எடுத்துக்காட்டு தமிழ்நாட்டிலுள்ள உத்திமேரூர் பகுதிதான் என்றும், இந்தியா ஒரு சிறந்த ஜனநாயக நாடு என்பதற்கான சான்றுகள் சுமார் 1,100-1,200ம் ஆண்டுகளில் முன்னோர்களால் எழுதப்பட்ட கல்வெட்டுகள் இங்கு உள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அந்த காலங்களில் நடத்தப்பட்ட இந்த ஜனநாயகம் மிக்க அரசியலமைப்பு என்பது, கிராம சபைகள் மூலம் தான் நடத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சட்டமன்றம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும், உறுப்பினர்களின் தகுதி என்ன, உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் செயல்முறை மற்றும் உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது போன்றவற்றை இந்த கிராம சபை முறை தெளிவாக குறிப்பிடுகிறது என பிரதமர் மோடி கூறினார்.
உலகின் பழமையான மொழி தமிழ், இதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறோம் என்று பிரதமர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *